Tamil Scholars and their Contribution MCQ Quiz in मल्याळम - Objective Question with Answer for Tamil Scholars and their Contribution - സൗജന്യ PDF ഡൗൺലോഡ് ചെയ്യുക

Last updated on Mar 8, 2025

നേടുക Tamil Scholars and their Contribution ഉത്തരങ്ങളും വിശദമായ പരിഹാരങ്ങളുമുള്ള മൾട്ടിപ്പിൾ ചോയ്സ് ചോദ്യങ്ങൾ (MCQ ക്വിസ്). ഇവ സൗജന്യമായി ഡൗൺലോഡ് ചെയ്യുക Tamil Scholars and their Contribution MCQ ക്വിസ് പിഡിഎഫ്, ബാങ്കിംഗ്, എസ്എസ്‌സി, റെയിൽവേ, യുപിഎസ്‌സി, സ്റ്റേറ്റ് പിഎസ്‌സി തുടങ്ങിയ നിങ്ങളുടെ വരാനിരിക്കുന്ന പരീക്ഷകൾക്കായി തയ്യാറെടുക്കുക

Latest Tamil Scholars and their Contribution MCQ Objective Questions

Top Tamil Scholars and their Contribution MCQ Objective Questions

Tamil Scholars and their Contribution Question 1:

'உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்' - எனக் கூறியவர் யார்?

  1. நாமக்கல் கவிஞர்
  2. கவிமணி
  3. பாரதி 
  4. பாரதிதாசன்

Answer (Detailed Solution Below)

Option 2 : கவிமணி

Tamil Scholars and their Contribution Question 1 Detailed Solution

சரியான பதில்: கவிமணி

Key Points

  • 'உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்' - எனக் கூறியவர் கவிமணி தேசிக விநாயகனார் ஆவார்.
  • இவ்வரிகள் கவிமணியின் படைப்பாகிய 'மலரும் மாலையும்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

Additional Information

  • கவிமணி:
    • இயற்பெயர்: தேசிக விநாயகனார்
    • ஊர்: தேரூர் (நாஞ்சில் நாடு) கன்னியகுமாரி  மாவட்டம் 
    • இவர் 36 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
    • படைப்புகள்:
      • ஆசியஜோதி,
      • மலரும் மாலையும்,
      • மருமக்கள் வழி மான்மியம்,
      • கதர் பிறந்த கதை.
    • மொழிபெயர்த்து உருவாகிய நூல்:
      • உமர்கய்யாம் பாடல்கள்

Tamil Scholars and their Contribution Question 2:

'புதிய அறம் பாட வந்த அறிஞன்' எனப் புகழப்படுபவர் யார்?

  1. பாரதிதாசன் 
  2. பாரதியார்
  3. திருவள்ளுவர்
  4. காரியாசன்

Answer (Detailed Solution Below)

Option 2 : பாரதியார்

Tamil Scholars and their Contribution Question 2 Detailed Solution

சரியான பதில்: பாரதியார்

Key Points

  • 'புதிய அறம் பாட வந்த அறிஞன்' எனப் பாரதியாரைப் பாரதிதாசன் புகழ்ந்துள்ளார்.  
  • பாரதியாரைப் பற்றிய சிறப்புத் தொடர்கள்: 
    • பாரதிதாசன் புகழ்ந்தவை: 
    • ​சிந்துக்குத் தந்தை,  
    • செந்தமிழ்த் தேனீ,  
    • புதிய அறம் பாட வந்த அறிஞர், 
    • மறம் பாட வந்த மறவன், 
    • நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா, 
    • காடு கமழும் கற்பூரச் சொற்கோ, 
    • பைந்தமிழ்த் தேர்ப்பாகன். 
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி (கவிமணியின் கூற்று), 
  • சென்னையின் தமிழ்க் கவிஞன் (ஆங்கில பத்திரிகையாளர் நெவின்சனின் கூற்று). 

 Additional Information

அறநூல்களும் ஆசிரியர்களும்: 

  • நாலடியார் - சமணமுனிவர்கள்   
  • நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார் 
  • இன்னா நாற்பது - கபிலர்  
  • இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார் 
  • திரிகடுகம் - நல்லாதனார் 
  • ஆசாரக்கோவை - பெருவாயின்முள்ளியார் 
  • பழமொழி - முன்றுரை அரையனார் 
  • சிறுபஞ்சமூலம் - காரியாசன் 
  • ஏலாதி - கணிமேதாவியர் 
  • திருக்குறள் - திருவள்ளுவர் 
  • முதுமொழிக்காஞ்சி - கூடலூர் கிழார்

Tamil Scholars and their Contribution Question 3:

தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்…….

  1. இராஜாஜி
  2. பெரியார்
  3. திரு.வி.க.
  4. நேதாஜி

Answer (Detailed Solution Below)

Option 3 : திரு.வி.க.

Tamil Scholars and their Contribution Question 3 Detailed Solution

சரியான பதில்: ​திரு.வி.கKey Points

  • தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் திரு.வி.க. ஆவார்.

முத்துராமலிங்கத்தேவர்:

  • பிறந்த ஊர்: இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்
  • பிறந்த நாள்: 30 - 10 - 1908
  • பெற்றோர்: உக்கிர பாண்டியத்தேவர், இந்திராணி அம்மையார்.
  • சிறப்புப் பெயர்கள்: தேசியம் காத்த செம்மல், வித்யா பாஸ்கர், பிரவசன கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்தசமய மேதை.
  • முத்துராமலிங்கத்தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்.
  • இவர் சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச்சுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற பலதுறைகளிலும் ஆற்றல் உடையவராக விளங்கினார்.
  • வடஇந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர் பாலகங்காதர திலகர் ஆவார். அதைப்போல் தென்னாட்டில் அச்சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டவர் முத்துராமலிங்கத்தேவர் ஆவார்.
  • இவர் நேதாஜியை தமது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார்.
  • இவர் விடுதலைக்குப்பின் நேதாஜி என்னும் பெயரில் வார இதழ் நடத்தினார்.
  • இவர் சுதந்திரப் போராட்டத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு அலிப்பூர், அமராவதி, தாமோ, கல்கத்தா, சென்னை, வேலூர் போன்ற சிறைகளில் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
  • இவர் ஜமீன் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி விவசாயிகள் துயர்துடைக்கப் பாடுபட்டார்.

திரு.வி. கலியாண சுந்தரனார்:

  • பிறந்த ஊர்: துள்ளம்
  • பிறந்த தேதி: 1883 - ஆகஸ்ட் - 26
  • சிறப்புப் பெயர்: தமிழ்த்தென்றல்
  • நடத்திய  இதழ்கள்: தேசபக்தன், நவசக்தி
  • இயற்றிய நூல்கள்: தேசபக்தாமிர்தம், இந்தியாவும் விடுதலையும், தமிழ்ச்சோலை, உள்ளொளி, சைவத்திறவு, சைவத்தின் சமரசம்.
  • இவர் தமிழ்நாட்டில் தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்தவர்.

Additional Information

  • 'தென்னாட்டுச் சிங்கம் என்று தேவரைச் சொல்லுகிறார்களே, அது சாலப்பொருந்தும் என அவரது தோற்றத்தைப் பார்த்த உடனேயே நினைத்தேன். அவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது' என்று அறிஞர் அண்ணா புகழ்ந்துரைத்துள்ளார்.
  • 'முத்துராமலிங்கத்தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது, உதடுகளிலிருந்து அல்ல. உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்ணமயெனப் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவது அவர் வழக்கம்' என்று மூதறிஞர் இராஜாஜி பாராட்டியுள்ளார்.​​​​
  • முத்துராமலிங்கத்தேவர் தந்தை பெரியாரால் 'சுத்தத் தியாகி' என்று பாராட்டப்பட்டவர் ஆவார்.
  • "எனக்கு உங்களின் இரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருவேன்" என்பது நேதாஜியின் பிரபலமான வசனமாகும்.
  • நேதாஜி தமிழ் வீரர்களைப் பாராட்டி 'நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். 

Tamil Scholars and their Contribution Question 4:

அயோத்திதாசர் நடத்திய இதழ்_____.

  1. ஒருபைசாத் தமிழன்
  2. காலணாத் தமிழன்
  3. அரைப்பைசாத் தமிழன்
  4. அரையணாத் தமிழன்

Answer (Detailed Solution Below)

Option 1 : ஒருபைசாத் தமிழன்

Tamil Scholars and their Contribution Question 4 Detailed Solution

சரியான பதில்: ஒருபைசாத் தமிழன்Key Points

  • அயோத்திதாசர் நடத்திய இதழ் ஒருபைசாத் தமிழன் ஆகும்.
  • இவர் 1907 ஆம் ஆண்டு சென்னையில் ஒருபைசாத் தமிழன் என்னும் வாரஇதழை காலணா விலையில் தொடங்கினார்.
  • ஓர் ஆண்டிற்குப்பின் அவ்ளிதழின் பெயரைத் தமிழன் என மாற்றினார்.
  • 'தமிழன்' இதழ் மூலம் தமிழ்நாடு மட்டுமன்றி மைசூர், கோலார், ஐதராபாத், இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் பகுத்தறிவுச் சிந்தனை, இன உணர்வு, சமூகச் சிந்தனை ஆகியவற்றை ஊட்டினார்.

அயோத்திதாசர்:

  • இயற்பெயர்: காத்தவராயன்
  • பிறந்த ஊர்: சென்னை
  • பிறந்த நாள்: 20 - 05 - 1845
  • அயோத்திதாசர் தமிழ், பாலி, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சிப் பெற்றிருந்தார்.
  • இவர் 1892 ஆம் ஆண்டு திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.
  • அயோத்திதாசர் தென்னிந்திய சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
  • பதிப்பித்த நூல்கள்: போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்திரனச் சுருக்கம், பாலவாகடம்.
  • எழுதிய நூல்கள்: புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா.
  • திருவள்ளுவர், ஒளவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்.
  • சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருந்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Additional Information

  • "என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள்" என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

அயோத்திதாசரின் கல்விச் சிந்தனைகள்:

  • ஒரு மனிதனின் அறிவு வளர்ச்சிபெற வேண்டுமானால், கல்வி அறிவு அவசியம் என்று அயோத்திதாசர் கருதினார்.
  • 'கல்வியோடு கைத்தொழில், வேளாண்மை, தையல், மரம் வளர்த்தல் போன்றவற்றையும் கற்க வேண்டும்' என்று அயோத்திதாசர் கூறுகிறார்.
  • 'நிலவு நாளும் வளர்ந்து முழுநிலவாகி ஒளி வீசுவதுபோல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்பட வேண்டும்' என்கிறார்.
  • 'சங்ககாலப் பெண்களைப்போலவே, இக்காலப் பெண்களும் கல்விகற்றுத் தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக்கொள்ளும் உரிமையைப் பெற வேண்டும்' என்று இவர் எடுத்துரைத்தார்.

Tamil Scholars and their Contribution Question 5:

'பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் - பழைய 
மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்' என்னும் கவிதை மூலம் பாராட்டப்படுபவர் யார்?

  1. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
  2. உடுமலை நாராயணகவி
  3. ஜெயகாந்தன்
  4. வாணிதாசன்

Answer (Detailed Solution Below)

Option 1 : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

Tamil Scholars and their Contribution Question 5 Detailed Solution

சரியான பதில்: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

Key Points

  • 'பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் - பழைய 
    மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்'
    என்னும் கவிதை மூலம் பாராட்டப்படுபவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவார்.
  • இது ஜெயகாந்தனின் கவிதை ஆகும்.
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி ஜெயகாந்தனின் கவிதை:

               "எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை
               கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்   
               பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் - பழைய 
               மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்".

Additional Information 

  • பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்:
    • இயற்பெயர்: கல்யாணசுந்தரம்
    • ஊர்: செங்கப்படுத்தான்காடு
    • காலம்: 1930 - 1959
    • சிறப்புப் பெயர்: 
      • மக்கள் கவிஞர்,
      • எனது வலதுகை (பாரதிதாசன் கூற்று)
    • விருது: தமிழக அரசின் பாவேந்தர் விருது

Tamil Scholars and their Contribution Question 6:

தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்

  1. ஆறுமுக நாவலர்
  2. ஜோசப் கொன்ஸ்டான்
  3. ஜேம்ஸ் பிராங்கா
  4. ஜி.யு. போப்

Answer (Detailed Solution Below)

Option 3 : ஜேம்ஸ் பிராங்கா

Tamil Scholars and their Contribution Question 6 Detailed Solution

சரியான பதில்: ஜேம்ஸ் பிராங்கா
Key Pointsதமிழுக்கு அரும்பணிகள் ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்கள்:
  • வி. எஸ். இராஜன், ஜார்ஜ் எல். ஹார்ட், கௌசல்யா ஹார்ட், சிம். லிண்ட் ஹோம், இந்திரா, நார்மன், ஹால் சிப்மேன், டபிள்யூ குளோத்தி, ஜேம்ஸ் பிராங்கா, மறைந்த பேராசிரியர் ஏ.கே. இராமானுஜம்.
தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும் நாடுகள்:
  • சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு, பிஜித்தீவுகள், தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன்.
Additional Informationஆறுமுக நாவலர்:
  • ஊர் - இலங்கை யாழ்ப்பாணத்தின் நல்லூர்
  • புனைப் பெயர்கள் - இராமசாமி, சைவசமயாபிமானி, சைவப் பிரகாசர், நடுவன், கருணை, சைவன், இரக்கம், சைவப் பிரகாச சமாஜியர்.
  • சிறப்புப் பெயர்கள் - தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தற்கால தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் உரைநடையின் வேந்தர், சுவடிப் பதிப்பு முன்னோடி, உரைநடை வித்தகர், வசன நடை கைவந்த வள்ளலார், சைவக் காவலர், தமிழ்க் காவலர், புதிய தமிழ் உரைநடையின் தந்தை, செந்தமிழைப் பேணி வளர்த்த பெரும்புலவன்.
  • இயற்றிய நூல்கள் - சைவ சமய சாரம், சிவாலய தரிசன விதி, நித்திய கருமவிதி, சிரார்த்த விதி, தர்ப்பண விதி, குருசிஷ்யக்கிரமம், மருட்பா, சைவ தூக்ஷண பரிகாரம், மித்தியாவாத நிரசனம், சுப்பிர போதம், வச்சிரதண்டம்.
  • இவர் சைவத்தையும் தமிழையும் இரு கண்களாக போற்றியவர் ஆவார்.
  • இவர் நிறுத்தற்குறியீடுகளை முதன் முதலாக தமிழுக்கு அறிமுகம் செய்தவர் ஆவார்.
  • இவருக்கு நாவலர் என்ற பட்டம் திருவாவடுதுறை ஆதினம் வழங்கியது.
வீரமாமுனிவர்:
  • இயற்பெயர் - கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி
  • ஊர் - இத்தாலி
  • சிறப்புப் பெயர்கள் - உரைநடை இலக்கிய முன்னோடி, செந்தமிழ் தேசிகன், தைரியநாதர், தமிழ் அகராதியின் தந்தை.
  • இவர் மதுரையில் தங்கி சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றவர் ஆவார்.
  • இயற்றிய நூல்கள் - தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மனை, வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குருகதை, தொன்னூல் விளக்கம், சதுரகராதி, செந்தழிழ் இலக்கணம், ஞானக்கண்ணாடி, வேதவிளக்கம்.
ஜி.யு. போப்:
  • ஊர் - பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
  • சிறப்புப் பெயர்கள் - தமிழ் பாடநூல் முன்னோடி, வேத சாஸ்திரி
  • இவருக்கு தமிழ் கற்ப்பித்தவர் இராமானுஜ கவிராயர் ஆவார்.
  • இவர் தமிழ்நாட்டில் சென்னை சாந்தோம் பகுதியில் சமயப்பணி ஆற்றினார்.
  • தமிழ் இலக்கணம் மூன்று பாகங்கள் மற்றும் தமிழ் செய்யுள்களை தொகுத்து "தமிழ் செய்யுட் கலம்பகம்" என்று வெளியிட்டார்.
  • இவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம், சிவஞான போதம், புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

Tamil Scholars and their Contribution Question 7:

தேன்மழை என்னும் நூலை இயற்றியவர் யார்?

  1. வாணிதாசன்
  2. கண்ணதாசன்
  3. முடியரசன்
  4. சுரதா

Answer (Detailed Solution Below)

Option 4 : சுரதா

Tamil Scholars and their Contribution Question 7 Detailed Solution

சரியான பதில்: சுரதா

Key Points

  • தேன்மழை என்னும் நூலை இயற்றியவர் சுரதா ஆவார்.
  • சுரதாவின் படைப்புகள்:
    • தேன்மழை,
    • துறைமுகம்,
    • மங்கையர்க்கரசி,
    • அமுதும் தேனும்,
    • சிக்கனம்,     
    • சுவரும் சுண்ணாம்பும்.

Additional Information

  • முடியரசனின் படைப்புகள்:
    • பூங்கொடி,
    • வீரகாவியம்,
    • காவியப்பாவை,
    • புதியதொரு விதி செய்வோம்,
    • முடியரசன் கவிதைகள்,
    • வீரகாவியம்,
    • தமிழ் முழக்கம். 
    • கவிதை: சாதி என்பது நமக்கு ஏனோ?
  • வாணிதாசனின் படைப்புகள்:
    • காப்பியங்கள்:
      • தமிழச்சி, 
      • கொடிமுல்லை, 
      • தொடுவானம் (51 இசப்பாடல்களின் தொகுப்பு), 
    • நூல்கள்:
      • எழிலோவியம், 
      • தீர்த்த யாத்திரை,
      • இன்ப இலக்கியம்,
      • பொங்கல் பரிசு,
      • இரவு வரவில்லை
      • சிரித்த நுணா,
      • குழந்தை இலக்கியம்.

Tamil Scholars and their Contribution Question 8:

‘ஆத்திசூடி வெண்பா’ – நூலை இயற்றியவர் யார்?

  1. ஒளவையார்
  2. வெள்ளிவீதியார்
  3. அசலாம்பிகையார்
  4. அம்புஜத்தம்மாள்

Answer (Detailed Solution Below)

Option 3 : அசலாம்பிகையார்

Tamil Scholars and their Contribution Question 8 Detailed Solution

சரியான பதில் அசலாம்பிகையார்
Key Points
  • அசலாம்பிகையார் இயற்றிய நூல்கள்: 
    • காந்தி புராணம், ஆத்திச்சூடி வெண்பா, திலகர் புராணம், குழந்தை சுவாமிகள் பதிகம், இராமலிங்க சுவாமிகள் சரிதம்.
Additional Information
  • ஒளவையார் இயற்றிய நூல்கள்:
    • ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை.
  • வெள்ளி வீதியார் இயற்றிய நூல்கள்:
    • அகநானூற்றில் 2 பாடல்கள், குறுந்தொகையில் 8 பாடல்கள், நற்றிணையில் 3 பாடல்கள் ஆகும்.
  • அம்புஜதம்மாள் இயற்றிய நூல்: நான் கண்ட பாரதம்.

Tamil Scholars and their Contribution Question 9:

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா . . . என்று பாடியவர்

  1. கவிமணி
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. நாமக்கல் கவிஞர்

Answer (Detailed Solution Below)

Option 1 : கவிமணி

Tamil Scholars and their Contribution Question 9 Detailed Solution

சரியான விடை: கவிமணி

Key Points

  • கவிமணி கூற்று:
    • "மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்

                     செய்திடல் வேண்டுமம்மா".

Additional Information

  • பாரதி கூற்று:
    • "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

                     பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்".

  • 'பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோ' எனக் கூறியவர் பாவேந்தர்.
  • பாவேந்தர் கூற்று:
    • "பெண்எனில் பேதை என்ற எண்ணம

                    இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்

                    உருப்படல் என்பது சரிப்படாது".

Tamil Scholars and their Contribution Question 10:

அப்துல்ரகுமான் நடத்திய இதழ் யாது?

  1. எழுத்து
  2. காலச்சுவடு 
  3. விஜயா 
  4. கவிக்கோ

Answer (Detailed Solution Below)

Option 4 : கவிக்கோ

Tamil Scholars and their Contribution Question 10 Detailed Solution

சரியான பதில்: கவிக்கோ

Key Points

  • அப்துல்ரகுமான் நடத்திய இதழ் 'கவிக்கோ' ஆகும்.

அப்துல்ரகுமான்:

  •  காலம்: 9 நவம்பர் 1937 - 2 ஜூன் 2017
  •  இவர் 'வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப்' பணியாற்றினார்.
  •  இவர் 'வானம்பாடி இயக்கக்' கவிஞர்களுள் ஒருவர் ஆவார்.
  •  'கவிக்கோ' என்பது இவரது சிறப்புப் பெயர் ஆகும்.
  •  இவர் இயற்றிய நூல்கள்: பால்வீதி, நேயர் விருப்பம், கரைகளே நதியாவதில்லை, ஆலாபனை (சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்), பித்தன்.
  •  விருதுகள்: சாகித்ய அகாதெமி விருது, பாரதிதாசன் விருது, தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது, கலைமாமணி விருது, கவியரசர் பாரிவிழா விருது, அக்ஷர விருது, சிற்பி அறக்கட்டளை விருது.

Additional Information

  • சி. சு. செல்லப்பா தொடங்கிய இதழ் எழுத்து ஆகும்.
  • விஜயா என்னும் இதழைத் தொடங்கியவர் பாரதியார் ஆவார்.
  • ஜி. சிப்பிரமணிய அய்யரல் தொடங்கப்பட்ட இதழ் சுதேசமித்திரன் ஆகும்.
  • பசுவய்யா தொடங்கிய இதழின் பெயர் 'காலச்சுவடு' ஆகும்.
Get Free Access Now
Hot Links: teen patti master old version teen patti real cash 2024 teen patti list teen patti yas